நாம் ஆரோக்கியமாக இருக்க நம் உணவு முறைகளை கவனித்து சாப்பிட வேண்டும். இந்த அறிவு(ஞானோதயம்) எப்போது எனக்கு தோன்றியது என்றால் ஈஷாவின் கிராமோத்ஸவம் செப். 2007 சென்னை அண்ணா பல்கலை.யில் நடந்தது. அதில் ஏராளமான கிராமிய உணவு கடைகள் போட்டிருந்தார்கள். பருத்திப்பால் பருக நன்றாக இருந்தது. அது நடந்த பிறகு ஈஷாவின் யோகா வகுப்புகள் போக ஆரம்பித்தேன் , அதில் சத்குரு இயற்கை உணவு அவசியத்தை உணர்த்தினார். அருமையான உணவுகளையும் தீட்சிதை அன்று வழங்கினார்கள். அதற்கு பிறகு மறந்தேபோனேன். கையில் அறுவைசிகிச்சை ஒன்று நடந்தது, அப்போது மரு. சந்திரசேகர் (எலும்பியல் நிபுணர்) நல்ல நண்பருங்கூட :-) எடை குறைப்பதன் அவசியத்தை உணர்த்தினார். அப்போது உணவே மருந்து எனும் தலைப்பில் புத்தகத்தை வாங்கி பயன்பெற அறிவுறுத்தினார் . வழக்கம்போல் வலையில் தேடி ஒன்றும் சிக்கவில்லை. சரி நம்மால முடிஞ்ச அளவுக்கு தகவல் சேகரிச்சு போடலாம்னு தீர்மானிச்சேன்.